Monday, September 27, 2010
தீடீர் ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நீர் - 5கப்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு ,வெல்லம் - தேவையான அளவு
நெய்யில் வறுக்கவும்:
துவரம் பருப்பு - டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - (இரண்டாக கிள்ளியது )
மிளகு - டீ ஸ்பூன்
வெந்தயம் - டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
1. புளியை 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. நன்கு பிழிந்து கரைசல் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து 5 கப் தயாரித்துக் கொள்ளவும்.
3. கறிவேப்பிலை,உப்பு ,வெல்லம் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை 1 (அ) 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4. நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து ரசத்தில் சேர்த்து ஒருமுறை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
5. உடனடியாக மூடியால் மூடவும்.சூடாக சாதத்துடன் பரிமாறவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment